பிரதம மந்திரியின் புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு

பிரதம மந்திரியின் புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் விண்ணப்பித்து தங்கள் பயிரினை காப்பீடு செய்து கொண்டு விவசாயிகள் பயன்பெற வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

2016- 1017 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட இக்காப்பீட்டுத் திட்டம் நடப்பு 2017-2018 ஆம் ஆண்டிலும் நடைமுறைக்கு வந்துள்ளதால் கோவை மாவட்டத்தின் அறிவிக்கை செய்யப்பட்ட, வருவாய் கிராமங்களைச் சேர்ந்த அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை நடப்பு காரிஃப் பருவத்தில் பயிரிட உள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

மேலும், இத்திட்டம் கோவை மாவட்ட விவசாயிகளை சென்றடைய ஏதுவாக வேளாண்மைத் துறையினரால் கிராம அளவில் விளக்கக் கூட்டங்கள் நடத்தவும், வட்டார அளவில் தகவல் மற்றும் சேவை மையங்களை அமைத்து விவசாயிகளுக்கு இத்திட்டததில் சேர வேண்டிய உதவிகளை செய்யவும் மாவட்ட நிர்வாகத்தினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, கோவை மாவட்டத்தினைச் சேர்ந்த அனைத்து தகுதியுள்ள விவசாயிகளும் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடைய கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

Newsletter

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...