நீர் தேங்காத வகையில் தேவையற்ற பொருட்களை அகற்ற மாவட்ட எச்சரிக்கை அறிவுறுத்தல்

பொதுமக்கள் பயன்படாத சிமெண்ட் தொட்டிகள், தண்ணீர் தொட்டி, ஆட்டுக்கல், தேங்காய் ஓடுகள், வாளி, பிளாஸ்டிக் தட்டுகள், டயர்கள், திறந்த கிணறு போன்றவற்றினை நீர் தேங்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்திட வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியம் ராசக்காப்பாளையம், பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியம் ஊஞ்சவேலம்பட்டி, பூசாரிப்பட்டி, கஞ்சம்பட்டி, ஆனைமலை ஊராட்சி ஒன்றியம் திவான்சாப்புதூர் ஆகிய ஊராட்சிப்பகுதிகளில் இன்று (18.07.2017) காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை ஊரக வளர்ச்சித்துறை, பொதுசுகாதாரத்துறை, ஆகிய அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிப்பகுதிகளிலும்; மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அவ்வாறு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் துறை உயர் அலுவலர்கள் மூலம் திடீர் ஆய்வுகளும் மேற்கொள்ளபடுகின்றது. அதன்படி இன்று ஊஞ்சவேலம்பட்டி, பூசாரிப்பட்டி, கஞ்சம்பட்டி, திவான்சாப்புதூர் ஆகிய ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதாரப்பணிகளை ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் சுகாதாரத்துறை மட்டுமல்லாது, ஒருங்கினைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டப்பணிகள், கல்வித்துறை, உள்ளாட்சித்துறை ஆகிய துறைகளுடன் மக்களுடன் சார்புள்ள அனைத்துத்துறைகளும் இணைந்து காய்ச்சலை ஒழிக்க விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.



பொது இடங்களில் கொசு உற்பத்தியை ஒழித்து  அதன் மூலம் ஏற்படும் காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் புகை மருந்து மூலம் கொசுக்களை ஒழிப்பதற்கான வழிமுறைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குடிநீரில்; உற்பத்தியாகும் ஏ.டி.எஸ் கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள் வராமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீரை காய்ச்சி பருகுதல், சுற்றுப்புற சுகாதாரத்தை பேணிப்பாதுகாப்பது, வீடுகளில் மழைநீர் தேங்காத வண்ணம் பார்த்துக்கொள்வது, போன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.



மேலும் காய்சசலுக்கான அறிகுறிகள் ஏதும் ஏற்பட்டால் அருகில் உள்ள, ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைகளை அணுகி முறையான சிகிச்சை பெற வேண்டும். பொது சுகாதாரம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, மற்றும் உள்ளாட்சி அமைபைச் சார்ந்த உயர் அலுவலர்கள் மாவட்டந்தோறும் குழுக்களாக பிரிக்கப்பட்டு கள ஆய்வு மேற்கொண்டு மேற்பார்வை செய்து வருகின்றனர்.

மாவட்டத்திலுள்ள உள்ள அனைத்துப் பகுதிகளிலும் காய்ச்சல் நிலைமை நாள்தோறும் கூர்ந்து கண்கானிக்கப்பட்டு வருகின்றது. அனைத்து வகையான காய்சலுக்கும் தேவையான மாத்திரைகள் போதிய அளவில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அரசு மருத்துவ மனைகளிலும் இருப்பில் உள்ளன. இது தவிர எந்தப்பகுதிகளிலும் மூன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டால் அந்தப்பகுதியில் காய்ச்சல் ஏற்படுவதற்கான காரணத்தினை கண்டறிந்து அதனை உடனே முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கபட்டு வருகின்றன.

அதுமட்டுமின்றி, பொதுமக்கள் தங்கள் வீட்டினுள் தண்ணீர் கொசு புகாத வண்ணம் மூடி வைக்க வேண்டும். வீட்டினருகே, பயன்படாத சிமெண்ட் தொட்டிகள், தண்ணீர் தொட்டி, ஆட்டுக்கல், தேங்காய் ஓடுகள், வாளி, பிளாஸ்டிக் தட்டுகள், டயர்கள், திறந்த கிணறு போன்றவற்றினை நீர் தேங்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி சுகாதாரத்தினை பேணிக்காக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.த.ந.ஹரிஹரன் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

பின்னர், கஞ்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெற்று வரும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான மருத்துவ முகாமினையும் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பார்வையிட்டார்.

இவ்வாய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், பொள்ளாச்சி சார் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், உதவி பயிற்சி ஆட்சியர் சரண்யாஹரி மற்றும் சுகாதாரம், உள்ளாட்சித்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...