டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய மிலிட்டரி அகாடமியில் 8ம் வகுப்பு சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய மிலிட்டரி அகாடமியில் ஜனவரி 2018-யில் தொடங்கப்படவுள்ள எட்டம் வகுப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு வரும் 2017 டிசம்பர் 1ம் தேதி மற்றும் 2ம் தேதிகளிலும் மற்றும் நேர்முகத் தேர்வு 2018 ஏப்ரல் 5ம் தேதியன்று நடைபெறவுள்ளது.

நுழைவுத் தேர்வில் 2018 ஜூலை 1 அன்று 11 வயது நிறைவு பெற்று ஆறு மாதம் முதல் 13 வயது வரை உள்ள ஏழாம் வகுப்பு பயின்று வரும் மற்றும் தேர்ச்சி பெற்ற ஆண் மாணவர்கள் மட்டுமே கலந்துகொள்ள இயலும்.

விண்ணப்பம் மற்றும் தகவல் குறிப்பேட்டினை கமாண்டென்ட், ராஷ்ட்ரிய இந்தியன் திலிட்டரி கல்லூரி, டேராடூன்- 248 003, உத்ரகாண்ட் மாநிலம் எனும் முகவரிக்கு உரிய கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தேர்வுக் கட்டுப்பாடு அலுவலர், தமிழ்நாட அரசு பணியாளர் தேர்வாணையம், சென்னை 3 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 2017 செப்டம்பர் 30 ஆகும்.

இத்தேர்வு தொடர்பான மேலும் விபரங்களை www.rimc.gov.in எனும் இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என்றும் தகுதியுள்ள கோவை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...