திருப்பூரில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா வரும் ஜூலை 22ம் தேதியன்று (நாளை) சிறப்பாக நடைபெறவுள்ளது. இவ்விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். 

இவ்விழாவினையொட்டி திருப்பூர் மாவட்டம் முழுவதும் ஒரு வார காலமாக பள்ளி மாணவ மாணவியர்களிடையே பல்வேறு கட்டுரை, கவிதை, பேச்சு மற்றும் விளையாட்டு போட்டிகளும் ஊராட்சிப் பகுதிகளில் எம்.ஜி.ஆர் பற்றிய குறும்படமும், அவர் நடித்த திரைப்பபடங்களும் கிராமங்களில் மின்னணுத் திரை மூலம் திரையிடப்பட்டு வருகின்றன.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நாளை நடைபெறும் இந்த நூற்றாண்டு விழாவிற்கு தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தலைமை வகிக்கவுள்ளார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் முன்னிலை வகிக்கவுள்ளார். மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை சிறப்புரை ஆற்றவுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்தினை திறந்து வைத்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழாப் பேருரையாற்றுவார்.

மேலும், விழாவில் அமைச்சர்கள், சட்டப்பேரவை துணைத் தலைவர், அரசு தலைமை கொறடா, தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி, புதுடெல்லி மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்குவார்கள். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திநாதன் வரவேற்புரையாற்ற உள்ளார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி நன்றியுரையாற்றுவார்.

இதனைத்தொடர்ந்து, இந்த நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பிற்பகல் 3 மணியளவில், விழா மேடையில் எம்.ஜி.ஆர் புகழ்பாடும் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...