ரூ. 2000 விற்க முயன்ற குழந்தை மீட்பு- தாயிடம் குழந்தை நல குழு விசாரணை


அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆனந்தி (35). கோவை தடாகம் பகுதியில் உள்ள தனியார் பஞ்சாலை ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையை குழந்தை இல்லாத ஒரு தம்பதியினருக்கு 2000 ரூபாய்க்கு விற்க முயன்றுள்ளார்.



குழந்தையை வாங்க இருந்த தம்பதியினருக்கு சில சந்தேகங்கள் எழுந்ததால் இது குறித்து உக்கடம் பகுதியில் உள்ள சைல் லைன் அமைப்பினரிடம் தொலைபேசியில் தகவல் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் ஆய்வாளர் மற்றும் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு அவ்வமைப்பினர் தகவல் அளித்ததைத் தொடர்ந்து தடாகம் பகுதிக்கு சென்ற காவல்துறையினர் குழந்தையை மீட்டு குழந்தைகள் நல குழுவினரிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து ஆனந்தியிடம் விசாரணை மேற்கொண்டதில் திருமணம் ஆகாமலேயே தவறான தொடர்பால் பிறந்த குழந்தை என்பதால் விற்க முயன்றதாக தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு பிறந்த மற்றொரு குழந்தையை சில வருடங்களுக்கு முன்பு கேரளாவில் 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதாக விசாரணையில் தெரிவித்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்த குழந்தைகள் நல குழுவினர் அவரிடம் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் 2000 ரூபாய்க்கு குழந்தையை விற்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...