ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கோவை வ.ஊ.சி மைதானத்தில் போராட்டம்: 14 இளைஞர்கள் கைது

கோவை வ.உ.சி மைதானத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோவை வ.உ.சி மைதானத்தில் இன்று மாலை கல்லூரி மாணவர்களும் இளைஞர்களும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நெடுவாசல், கதிராமங்கலம் பகுதிகளில் விவசாயிகள் மேற்கொள்ளும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் மாணவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

போராட்டம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் வ.உ.சி மைதானத்திற்கு விரைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை உடனடியாக கலைந்து செல்லும்படியும் இல்லையெனில் கைது செய்வதாக எச்சரித்தனர்.

காவல் துறையினரின் எச்சரிக்கையையும் மீறி இளைஞர்கள் போராட்டத்தை தொடர்ந்ததால் அவர்களை காவல் துறையினர் கைது செய்ய முயன்றனர்.

அப்போது அப்போது இளைஞர்கள் எழுந்தவுடன் அவர்களை  காவல்துறையினர்  விரட்டிச்சென்று கலைத்தனர். கலையாமல் நின்று கொண்டு இருந்த பெண்கள் உட்பட  14 பேரை காவல் துறையினர் கைது செய்து ரேஸ்கோர்ஸ் காவல்நிலையம் அழைத்து சென்றனர். இதனையடுத்து வ.உ.சி மைதானத்தில் பாதுகாப்பிற்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். 

ஜல்லிக்கட்டுக்காக போராடியதை போல இளைஞர்கள் நெடுவாசல், கதிராமங்கலம் விவகாரங்களுக்காக ஓன்று சேர்ந்து விடக்கூடாது என்பதால் முன் கூட்டியே காவல் துறையினர் போராட்டங்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...