அதிமுகவினர் நடத்தும் நாடகத்தால் தமிழக மக்கள் ஏமாறுவதாக -கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் குற்றச்சாட்டு

சசிகலா, தினகரன், எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ் என அதிமுகவினர் நடத்தி வரும் நாடகத்தால் தமிழக மக்கள் ஏமாற்றமடைந்து வருவதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜி.எஸ்.டியை நடைமுறைப்படுத்த மத்திய அரசு குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாவது கால அவகாசம் அளிக்க வேண்டும் என வலியுறித்தினார். ஒரு மொழியை விரும்பி படிப்பதை தடுப்பது எப்படி தவறோ அதைப் போலவே ஒரு மொழியை மற்ற மாநில மக்களின் மீது திணிப்பதும் தவறு எனக்கூறிய அவர் கோரிக்கைகளை வலியுறித்தி போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை நேரில் சந்திக்க பிரதமர் முன்வர வேண்டும் எனவும் அவர் வலியுறித்தினார். ஊழலில்லா தமிழகத்தை உருவாக்க தங்கள் கட்சி எப்போதும் துணை நிற்கும் என தெரிவித்தவர். நடிகர் கமலஹாசனின் கருத்துக்களை ஊழலுக்கு எதிரான கருத்துக்களாக மட்டுமே பார்க்க வேண்டும் என தெரிவித்தார். 

ஆனால், கமலின் கருத்துக்களுக்கு பதில் கருத்து சொல்லி பல்வேறு பிரச்சனைகளை திசை திருப்ப தமிழக அமைச்சர்கள் முயல்வதாக அவர் குற்றம்சாட்டினார். நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக முன்பே தமிழக அரசு தெளிவுபடுத்தியிருக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உரிய தீர்வை குடியரசு தலைவர் மூலமாக மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு பெற்றுத்தர வேண்டும் எனவும் தெரிவித்தார். கோவையில் மெட்ரோ இரயில் திட்டம் வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தமிழக அரசின் இந்த திட்டத்தை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...