ஓ.பி.எஸ் அணியின் மீது எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி விதிக்கும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை- முன்னாள் அமைச்சர் செ.தாமோதிரன் விளக்கம்

ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகிய கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டிக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டு வந்ததாகவும், அவரது குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை எனவும் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியை சேர்ந்தவரும், முன்னாள் அமைச்சருமான செ.தாமோதிரன் விளக்கம் அளித்துள்ளார்.

கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியில் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியை சேர்ந்தவரும், முன்னாள் அமைச்சருமான செ.தாமோதிரன் இன்று செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தங்கள் அணியில் இருந்து விலகிய கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டிக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டது. அவரது குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. தனது தொகுதியில் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்காக அணி மாறியதாக கூறும் ஆறுக்குட்டி, இதற்காக எதிர்கட்சியாக இருக்கும் போது ஆளுங்கட்சிக்கு செல்வாரா ?.

தமிழகத்தில் தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கும் மரியாதை அளிக்கும் ஒரே தலைவர் ஓ.பன்னீர்செல்வம். இந்த தலைமையில் இருந்து ஆறுக்குட்டி வெளியேறியது வேதனை அளிக்கிறது. வழக்கு உள்ள அதிமுக அமைச்சர்கள் கைது செய்யப்படலாம். எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர் பதவி கேட்டு முதலமைச்சருக்கு தொல்லை கொடுத்து வருவதால் மேலும் கட்சி உடைய வாய்ப்புண்டு. இந்த ஆட்சி எவ்வளவு நாள் நீடிக்கும் என சொல்ல முடியாது. அணிகளாக அதிமுக பிளவுபட்டு இருப்பதால் பலமிழந்துவிடாது. இரு அணிகள் இணைய தற்போது வாய்ப்பில்லை. சசிகலா குடும்பத்தை வெளியேற்றினால் மட்டுமே இணைப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்' என தெரிவித்தார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...