சி.ஆர்.ஐ. அறநிலை மற்றும் சங்கரா கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

கோவை மாவட்டம், கீரணத்தம் கிராமத்தில் அமைந்துள்ள சி.ஆர்.ஐ. அறநிலை, பொது மக்களின் நலன் கருதி ஏழை எளிய மக்கள் பயன்பெறத்தக்க வகையில் கல்வி நிலையங்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், பொது மக்களின் தேவைக்கான அத்தியாவசியக் கட்டமைப்புகளை நிறுவ நிதியுதவி வழங்குதல் போன்ற மற்றும் பல நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. 



மேலும், கீரணத்தம் மற்றும் சுற்றுவட்டார மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு கீரணத்தம் கிராமத்தில் ஓர் பல்நோக்கு மருத்துவமனை அமைத்திடத் திட்டமிட்டு, அது தொடர்பான பணிகள் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. அதன் தொடக்கமாக சி.ஆர்.ஐ. அறநிலை, கோவை சங்கரா கண் மருத்துவ மையத்துடன் இணைந்து கீரணத்தம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களின் ஏழை எளிய மக்களின் நலன் கருதி இலவச கண் மருத்துவ முகாமை நடத்தியது.

இந்த முகாமில் கீரணத்தம், கீரணத்தம் புதுப்பாளையம், கொண்டையம்பாளையம், வரதயங்கார்பாளையம், குரும்பாளையம், கோவில் பாளையம், கோட்டைப்பாளையம், அக்ரஹார சாமக்குளம், அத்திப்பாளையம், கோவிந்தநாயக்கன் பாளையம், இடிகரை, வட்டமலைப் பாளையம், சின்னவேடம்பட்டி, சின்னமேட்டுப் பாளையம், சரவணம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனையும், கண் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வும் வழங்கப்பட்டது. கண் மருத்துவர்களின் பரிசோதனைக்குப் பின் 26 பேர் கண்புரை அறுவைச் சிகிச்சைக்காக சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

முன்னதாக கீரணத்தம் கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சுகுமார், சி.ஆர்.ஐ. அறநிலையின் மருத்துவ மையத்தில் குத்துவிளக்கேற்றி வைத்து இலவச கண் மருத்துவ முகாமினைத் துவக்கிவைத்தார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...