மாணவி வளர்மதி மீது பொய் வழக்கு - டிராபிக் ராமசாமி

மாணவி வளர்மதி மீது காவல்துறையினர் பொய் வழக்கு போட்டு இருப்பதாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி குற்றம்சாட்டியுள்ளார்.



கோவை வ.உ.சி மைதானத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர் வ.உ.சி. மைதானத்தில் பொது மக்களை காவல் துறையினர் அனுமதிப்பதில்லை என தகவல் வந்ததால் பார்க்க வந்ததாக தெரிவித்தார்.

மேலும், வ.உ.சி. மைதானம் ஆளுங்கட்சியினருக்கும் குறிப்பிட்ட சிலருக்கும் மட்டுமே வாடகைக்கு கொடுக்கப்படுவதாகவும், அதிகாரிகள் பொறுப்பில்லாமல் செயல்படுவதாக குற்றச்சாட்டியவர், வ.உ.சி. மைதானத்தில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வீடு கட்டி கொடுக்கலாம் அல்லது விளையாட்டு திடலாக மாற்றலாம் என தெரிவித்தார்.

இதனை வலியுறுத்தி மாநகராட்சிஆணையர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்படும் என தெரிவித்தார். மாணவி வளர்மதி மீது காவல் துறையினர் பொய் வழக்கு போட்டு இருக்கின்றனர் என கூறிய அவர், 50 க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கும் சினமா பைனான்சியர் போத்ரா மீது ஏன் குண்டாஸ் போடவில்லை என கேள்வி எழுப்பினார். கொள்ளையனே வெளியேறு என்ற பெயரில் சென்னை மெரினாவில் வரும் 8ம்தேதி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்த இருப்பதாக டிராபிக் ராமசாமி தெரிவித்தார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...