கோவையில் நீட் தேர்விற்கு ஆதரவாக தனியார் பள்ளி மாணவர்கள் கோரிக்கை

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு முயற்சிக்க கூடாது எனவும், நீட் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டுமென கோவையில் நீட் தேர்விற்கு ஆதரவாக தனியார் பள்ளி மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் தனியார் பள்ளியில் படித்த மாணவ, மாணவிகள் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மாநில பாடத்திட்டத்தில் படித்த எல்லா மாணவர்களும் நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்கவில்லை எனவும், ஒரு சிலர் மட்டுமே நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தனர். நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற தாங்களுக்கு நிச்சயம் மருத்துவ படிப்பிற்கான இடங்கள் கிடைத்துவிடும் என நினைத்து நம்பி இருந்த நிலையில், தமிழக முதல்வர் நீட் தேர்வில் இருந்து அவசர சட்டம் மூலம் விலக்கு அளிக்க நடவடிக்கை எடுத்து வருவது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர். 

நீட் தேர்வு கட்டாயம் தேவை எனவு அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் புரிந்து படித்தால் எளிதாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் எனவும் தெரிவித்தனர். மேலும், தமிழக அரசு நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க கூடாது எனவும், அப்படி விலக்கு அளித்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் எனவும் கூறினர். நீட் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டுமெனவும், இக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதலமைச்சரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...