தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் டெங்கு விழிப்புணர்வு கூட்டம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் நல இயக்கதில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்காக டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.



டெங்கு விழிப்புணர்வு கூட்டத்தில் நகர நல மருத்துவ அலுவலர் கே. சந்தோஷ்குமார் டெங்கு காய்ச்சல் பற்றியும், கொசுக்களால் வியாதி பரவுதலைப்பற்றியும் விழிப்புணர்வு உரையாற்றினார்.

கோவை மாநகர சுகாதார அலுவலர் கே.வி. திருமால் மற்றும் சுகாதார ஆய்வாளர் கே.ராதாகிருஷ்ணன் டெங்கு உற்பத்தியாகும் இடங்கள் பற்றியும், கொசு உற்பத்தி மையங்களை தடுப்பது பற்றியும் செயல்முறை காட்சிகளை நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு விளக்கி கூறினார்கள்.

மேலும், பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பல்கலைக்கழக குடியிருப்புப் பகுதிகளில் டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பொது சுகாதாரத்தைப் பற்றிய அறிவுரைகளை வழங்கி டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்கள்.  

டெங்கு விழிப்புணர்வு கூட்டத்தினை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் மற்றும் சுகாதார அலுவலர் மருதாசலம் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...