கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைபவர்களிடம் தீவிர சோதனை

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நாட்களில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இந்த நாளில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக எழுதி மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக தொடர்ந்து ஆட்சியரிடம் மனு அளிக்க வருவோர் மண்ணெண்னை உள்ளிட்ட எரிபொருட்களை எடுத்துவந்து உடலின் மேல் ஊற்றி தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதனால், கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டு வருகிறது. 

இதனைத் தவிர்க்கும் வகையில் தற்போது கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைபவர்களை கடும் சோதனைக்கு பிறகே போலீசார் அனுமதிக்கின்றனர். 



ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழையும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், அவர்களது அடையாள அட்டையை காண்பித்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.



Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...