துடியலூர் பகுதியில் அருந்ததியர் மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி தமிழ்புலிகள் அமைப்பினர் ஆட்சியரிடம் மனு

துடியலூர் பகுதியில் அருந்ததியர் மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும். மின்சார வசதி ஏற்படுத்த வேண்டும். தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்க வேண்டும் என தமிழ்புலிகள் அமைப்பின் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



இதுகுறித்து தமிழ்புலிகள் அமைப்பின் மாநகர மாவட்ட செயலாளர் தம்பி வினோத் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

பெரியநாய்க்கன்பாளையம் ஒன்றியம், புதுபுதூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் சுமார் 35 ஆண்டுகளாக சுமார் 40 அருந்ததியர் மக்கள் குடும்பங்கள் வீடுகட்டி வசித்து வருகின்றனர். மேற்படி மக்கள் வசிக்கும் வீடுகளுக்கு வீட்டு மனைப் பட்டா, மின்சார வசதி, கழிப்பிட வசதி, சாலை வசதி உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாமலேயே உள்ளது.



மேலும், இந்த ஊரின் தென்புறமும், வடபுறமும் சுமார் 10 செண்ட் அளவிற்கு தனியார்கள் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் இருமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையிலும் இம்மக்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. 

எனவே, கோவை மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு மேற்குறிப்பிட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும்' என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...