தனியார் நிறுவன உரத்தால் நாசமான பயிர்கள்- ஆட்சியரிடம் விவசாயிகள் புகார்

கோவை அடுத்த சுல்தான்பேட்டை ஒன்றியம் வதம்பசேரி ஊராட்சி நல்லூர்பாளையம் பகுதியில் பந்தலில் விளையக் கூடிய காய்களுக்கு இயற்கை முறை மருந்து அதிக விளைச்சலை அளிக்கும் எனக் கூறி மதுரையை தலைமையிடமாகக் கொண்ட நிறுவனம் அளித்த மருந்தினால் ஐந்தரை ஏக்கர் விவசாய நிலத்தில் பயிறிடபட்டிருந்த காய்கறிகள் முற்றிலும் காய்ந்து விட்டதாகக் கூறி இன்று விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.



கோவை அடுத்த சுல்தான்பேட்டை ஒன்றியம் வதம்பசேரி ஊராட்சி நல்லூர்பாளையம் பகுதியில் பந்தலில் விளையக் கூடிய பாகற்காய், புடலங்காய்களுக்கு இயற்கை முறை மருந்து உள்ளதாகவும், இந்த மருத்தை தெளித்தால் அதிக விளைச்சலை அளிக்கும் என கூறி மதுரையை தலைமையிடமாக கொண்ட சத்தியம் பயோ என்ற நிறுவனம் 2000 ரூபாய்க்கான மருந்துகளை விற்று உள்ளனர்.

விவசாய நிலங்களில் இந்த மருந்த்தை தெளித்த 3 நாட்களுக்குள் பயிறிடபட்டிருந்த பயிர்கள் முற்றிலுமாக காய்ந்து விட்டது. இது குறித்து அந்த நிறுவனத்தின் பிரதிநிதியிடம் முறையிட்டபோது எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் ஐந்தரை ஏக்கர் நிலத்தில் பயிரிடபட்ட காய்கள் அனைத்தும் கருகிவிட்டது. 



இதனைத் தொடர்ந்து மீண்டும் அந்நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதியை தொடர்பு கொண்டபோது தங்கது மருந்தால் தான் பயிர்கள் காய்ந்து விட்டது என விவசாயிகளிடம் எழுதி கொடுத்துள்ளனர். இந்நிலையில் விவசாயிகள் தங்களை மிரட்டி கடிதம் எழுதி வாங்கியதாக அந்த நிறுவனம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் கருகிய பயிர்களோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து உரிய இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...