அன்னூர் வட்டத்தில் சாக்கடை கழிவு நீர் குட்டையை அகற்றக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மனு

அன்னூர் வட்டம், உப்புத் தோட்டம் பகுதியில் உள்ள சாக்கடை கழிவு நீர் குட்டையை அகற்றக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

கோவை மாவட்டம், அன்னூர் பேரூராட்சிக்குட்பட்ட உப்புத் தோட்டம் ஆனந்த் தியேட்டர் பின்புறம் வார்டு எண் 3, 13 மற்றும் 14 உள்ள பகுதியில் அன்னூர் நகரப்பகுதியிலிருந்து வரும் சாக்கடை கழிவுகள் தேங்கி குட்டையாக நிரம்பியுள்ளது. மேற்படி இடமானது கோவிலுக்கு சொந்தமான சுமார் மூன்றறை ஏக்கர் நிலமும் அதில் உள்ள கிணறும் சாக்கடைக் கழிவுகளால் நிரம்பி குட்டை போல் தேங்கி உள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சுகாதார கேட்டினால் பாதிக்கப்பட்டு டெங்கு, டைபாய்டு, மலேரியா மற்றும் சில மர்மக் காய்ச்சல்களினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அன்னூர் பேரூராட்சி மக்கள் சார்பில் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித பயனும் இல்லை.

இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வரும் கழிவு நீர் குட்டையை அகற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....