அறுவை சிகிச்சை மருத்துவர்களின் 41-வது மாநாடு வரும் 10-ம் தேதி துவக்கம்

தமிழ்நாடு அறுவை சிகிச்சை மருத்துவர்களின் 41-வது மாநாடு முதன் முறையாக கோவை அரசு மருத்துவமனையால் நடத்தப்பட உள்ளது. 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த அறுவை சிகிச்சை மருத்துவர்களின் மாநாடு கடந்த 1998-ம் ஆண்டு பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி சார்பில் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடப்பு ஆண்டில் 41-வது மாநாடு கோவை அரசு மருத்துவமனைக்கல்லூரியில் நடத்தப்படுகிறது.



இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட புற்றுநோய் மையத்தின் தலைவர் சுரேஷ் வெங்கடாச்சலம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அறுவை சிகிச்சை மருத்துவர்களின் மாநாடு கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி தொடங்கி நான்கு நாட்கள் நடைபெற்று 14-ம் தேதி நிறைவடைகிறது. இதில், தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த 600 மருத்துவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த மாநாட்டின் மூலம், இளம் மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் உள்ள தயக்கங்களை களைவது தொடர்பாக விளக்கம் அளிக்கப்படும். போதுமான மருத்துவர்கள் இருந்தும் அவர்கள் பணியினை முழுமையாக செய்ய போதுமான தொழில் நுட்ப வசதிகள் இல்லாமல் இருக்கிறது. இதனை சரி செய்ய தீர்மானங்கள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...