திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தன் கடமைகளை சுறுசுறுப்பாக செய்து வருகிறார்- சிபிஐ கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன்

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தன் கடமைகளை சுறுசுறுப்பாக செய்து வருகின்றார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் தா.பாண்டியன் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-



ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டு 38 நாட்கள் கடந்தும் இதுவரை அந்த வரி விதிப்பு குறித்து ஒரு தெளிவு பிறக்கவில்லை. முறையாக நாடாளுமன்றத்தில் ஜி.எஸ்.டி வரி குறித்து விவாதிக்கப்படவில்லை. வரி விதிப்பு கொள்கையில் சமூக நீதியும் இல்லை, மேக் இன் இந்தியா திட்டமும் இல்லை. 

ஜி.எஸ்.டி வரி விதிப்பினால் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிமுக என்ற பெயரில் தற்போது கட்சியும் இல்லை, கட்சி சின்னமும் இல்லை" என்றார். தொடர்ந்து, தற்போதை ஆட்சியின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றது என்ற பத்திரிகையாளர் கேள்விக்கு முறையற்று பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்க விரும்பவில்லை என த.பாண்டியன் கூறினார்.

தொடர்ந்து, அவர் பேசுகையில், அதிமுக பல அணிகளாக பிரிந்து இருப்பதை பயன்படுத்திக்கொண்டு பாஜக ஆட்சி நடத்துகின்றது. 

ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள அனைவரையும் விடுவிக்க வேண்டும். குறிப்பாக பேரறிவாளனை எந்த வித நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுவிக்க வேண்டும். காந்தி கொலையில் ஈடுபட்டவர்கள் கூட 10 ஆண்டுகளில் வெளியில் வந்துவிட்டார்கள். ராஜீவ்கொலையில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்டோர் சட்டவிரோதமாக சிறைவைக்கப்பட்டு இருக்கின்றனர்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தன் கடமைகளை சுறுசுறுப்பாக செய்து வருகின்றார். நீட் தேர்வு, மீத்தேன், குடும்ப அட்டை என அனைத்து மக்கள் பிரச்சனைகளிலும், வறட்சி காலங்களிலும் தொண்டர்களை தூர் வார இயக்கியது என ஸ்டாலின் நடவடிக்கைகள் அனைத்தும் பாராட்டத்தக்கது. அதே வேளையில் அதிமுகவின் கொள்கைகளுக்கு எதிராக நடைபெறும் விசயங்கள் குறித்து ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் அதிமுகவின் அனைத்து பிரிவுகளும் இருக்கின்றன. இவர்கள் தமிழகத்திற்கு எதிரான மத்திய அரசின் போக்கை கண்டிப்பதில்லை. அதிமுகவின் அனைத்து அணிகளும் தமிழகத்தை தலைகுனிய வைத்துவிட்டனர்" என்றார். 

இந்நிகழ்வின் போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...