சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான கூட்டு பண்ணை திட்டத்திற்கான குழு அமைக்கப்படும்- மாவட்ட ஆட்சியர்

சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான 2017-18-ம் ஆண்டில் தமிழகத்தில் கூட்டு பண்ணைய திட்டத்திற்கான குழு அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தகவல் தெரிவித்துள்ளார்.

2017- 18-ம் ஆண்டில் தமிழகத்தில் கூட்டு பண்ணையம் செயல்படுத்திட தமிழக அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கூட்டு பண்ணையம் திட்டத்தில், 20 நபர் கொண்ட, சிறு மற்றும் குறு விவசாயிகளை ஒருங்கிணைந்து ஒரு விவசாய ஆர்வலர் குழு அமைக்கப்பட வேண்டும். ஐந்து விவசாய ஆர்வலர் குழுக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரு விவசாய உற்பத்திக்குழு ஆரம்பிக்கப்படும்.

வணிக வசதியுடன் கூடிய இக்கூட்டு பண்ணைய முறையில், ஒருங்கிணைந்த பரப்பில் ஒரே பயிரினை உற்பத்தி செய்து, நீடித்த லாபகரமான தொழிலாக விவசாயத்தை மாற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கலப்பு பண்ணையம், மதிப்பு கூட்டிய வேளாண்பொருட்கள் உற்பத்தி செய்தல் மற்றும் குழுவினரே தொழில் முனைவோராக தொடரவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறு, குறு விவசாயிகள் அடங்கிய உற்பத்திகுழுக்கள், தங்களுக்குள் தகவல் பரிமாற்றம் செய்துகொள்ளவும், உயரிய வேளாண்மைத்துறை தொழில்நுட்பங்கள் மூலம் விளைச்சலை பெருக்கவும், அரசுத்துறை அலுவலர்கள் உதவுவர்.

உற்பத்தி குழுக்கள் துவங்கும் போது, ஒரு குழுவுக்கு தலா, ஐந்து லட்சம் ரூபாய் இருப்பு நிதி (கார்பஸ் நிதி) மூன்று கட்டமாக பரித்து வழங்கப்படும். குழுக்கள், கூட்டுறவு சங்கமாக பதிவு செய்யப்பட வேண்டும்.

கோவை மாவட்டத்தில், 130 விவசாய ஆர்வலர் குழுக்கள் துவங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2600 விவசாயிகள் கூட்டு பண்ணையம் திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டட உள்ளனர். தலா 5 ஆர்வலர் குழுக்கள் ஒருங்கிணைந்து கோவை மாவட்டத்தில் மொத்தம் 26 விவசாய உற்பத்தி குழுக்கள் அமைக்கப்படும். அவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் இருப்பு நிதியாக மொத்தம் ரூ.1.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

வேளாண்துறையுடன் தோட்டக்கலை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண்மை பொறியியல் துறை இணைந்து இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படும். இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை அணுகவும். இத்திட்டம் மூலம் சிறு மற்றும் குறு விவசாயிகள் வேளாண்மை துறை அலுவலர்களின் ஆலோசனைப்பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...