நீலகிரியில் மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு பேரணி

நீலகிரி மாவட்டம், உதகை மத்திய பேருந்து நிலையத்தில் இன்று ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார்.

 

விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் பேசியதாவது, “தூய்மை பாரத இயக்கத்தின் (ஊரகம்) கீழ் நீலகிரி மாவட்டத்திலுள்ள 35 கிராம ஊராட்சிகளிலும் தனி நபர் இல்லக் கழிப்பறைகள் கட்டும் பணியானது முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. நீலகிரி மாவட்டத்தில் நாளது வரையில் 19 கிராம ஊராட்சிகள் முற்றிலும் திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கமற்ற ஊராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வருகிற 31.08.2017 அன்று இம்மாவட்டத்தில், உதகமண்டலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முள்ளிகூர், தூனேரி, தும்மனட்டி, எப்பநாடு, உல்லத்தி, கடநாடு, இத்தலார், கக்குச்சி, நஞ்சநாடு மற்றும் பாலகொலா ஆகிய 10 கிராம் ஊராட்சிகளிலும் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தேனாடு, கெங்கரை, கொணவக்கொரை, நடுஹட்டி மற்றும் நெடுகுளா ஆகிய 5 கிராம ஊராட்சிகளிலும், கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முதுமலை ஊராட்சியில் அனைத்து இல்லங்களிலும் தனி நபர் இல்லக் கழிப்பறைகளை கட்டப்பட்டு திறந்த வெளியில் மலம் கழிக்கும் முறை அறவே இல்லை என்ற நிலையினை ஏற்படுத்திட மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சிறப்பு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து உதகை பிரீக்ஸ் பள்ளியில், முழு சுகாதார தமிழகம் முன்னோடி தமிழகம் என்ற தலைப்பில் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாணவ, மாணவியர்கள், அரசுத்துறை அலுவலர்கள் ஏற்றுக் கொண்டனர்.



இந்நிகழ்ச்சிகளில் திட்ட இயக்குநர், மகளிர் திட்டம் ரேணுகா தேவி, ஊரக வளர்ச்சி முகமை உதவி இயக்குநர் காசிநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஸ்கிருஸ்ணன், ரவிச்சந்திரன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...