பிளாஸ்டிக் கழிவுகள் மீதான ஜிஎஸ்டி வரியை இரத்து செய்யக் கோரி பிளாஸ்டிக் தொழிற்கூடங்கள் வேலை நிறுத்தம்

மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசால் தற்போது விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரிவிதிப்பில் 18 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்து கோவை நெகிழி மறுசுழற்சி, பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் விற்பனையாளர் சங்க கூட்டமைப்பு இணைந்து இன்று கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு கவனஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.



உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களுக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரிவிதிப்பில் 18 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரிவிதிப்பில் VERGIN GRANULES மற்றும் PR-GRANULES இரண்டும் 18 சதவிகிதம் வரிவிதிப்புக்குள்ளாகிறது. PR-GRANULES 5 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இலாப நோக்கத்தின் அடிப்படையில் சந்தைப் பொருள் உற்பத்தியாளரும் PR-GRANULES-க்கு பதிலாக VERGIN GRANULES வாங்க விரும்புவதினால், பழைய பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிலானது மிகுந்த பின்னடைவை சந்தித்துள்ளது.



இதனால், மறுசுழற்சி வணிகத்தை சார்ந்துள்ள தொழிற்கூடங்களும் முடங்கும் அபாயம் மற்றும் வேறு தொழிலை நோக்கி செல்லும் நிலைமை உருவாகும். இதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பணி இழப்பும் ஏற்படும். இந்த தொழில்களில் 70 சதவிகிதம் பேர் பெண் தொழிலாளர்களாக உள்ளனர். மறுசுழற்சிக்கு உபயோகப்படுத்தும் மூலப் பொருளானது மறைமுக தொழிலாளர்களான குப்பை பொறுக்கி தருபவர்கள் மற்றும் வீடுங்களில் இருந்து பயனற்ற நெகிழி கழிவுகளை சேகரித்து தருபவர்களிடம் மட்டுமே பெறப்படுகிறது. தொழில் போட்டிகளில் தங்களை தக்க வைத்துக் கொள்ள முயலும் மறுசுழற்சியாளரும் இவ்வாறு பெறப்படும் மூலப் பொருட்களின் விலையை குறைக்க நேரிடும். இதன் காரணமாக இத்தொழிலை சார்ந்துள்ள பல லட்சம் தொழிலாளர்கள் மீது பொருளாதாரச் சுமையை ஏற்றுகின்றனர்.

மேலும், இதன் மூலம் மத்திய அரசு அறிவித்த தூய்மை இந்தியா திட்டம் கேள்விக்குறியாகும். ஆகையால், இந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக பழைய பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவிகிதம் வரியிலிருந்து 5 சதவிகிதம் வரிவிதித்தும் மறுசுழற்சியாளர்களை ஊக்கப்படுத்தி தொழிலை அழியும் அபாயத்திலிருந்து காக்க வேண்டும் என்பதற்காக இந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...