கோவை- மும்பை செல்லும் விமானம் தாமதம்- பயணிகள் போராட்டத்தால் பரபரப்பு

கோவையில் இருந்து மும்பை செல்லும் இண்டிகோ விமானம் குறித்த நேரத்தில் கிளம்பாததால் அவதியடைந்த பயணிகள் கோவை விமான நிலையத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் இருந்து மும்பைக்கு இன்று பிற்பகல் 2.30 மணியளவில் செல்ல வேண்டிய இண்டிகோ விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக குறித்த நேரத்தில் கிளம்பவில்லை. விமானம் கிளம்புவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

மேலும், மும்பை செல்வதற்கான மாற்று ஏற்பாடு குறித்து முறையான விளக்கம் அளிக்காததால், பயணிகள் விமான நிலையத்திற்குள் தரையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மும்பை செல்வதற்கு மாற்று ஏற்பாடு செய்து தரக்கோரி வலியுறுத்திய பயணிகள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், இரவு 7 மணிக்கு வேறு விமானம் மூலம் மும்பை செல்வதற்காக மாற்று ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து சுமார் அரை மணி நேரம் நடந்த போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டம் காரணமாக கோவை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...