சிறை சாலைகளை கல்வி சாலைகளாக மாற்றுவதே நோக்கம்- கோவை மத்திய சிறை ஆய்வுக்கு பின் சைலேந்திரபாபு பேட்டி

சிறை சாலைகளை கல்வி சாலைகளாக மாற்றுவதே தமிழக அரசு மற்றும் காவல்துறையின் நோக்கம் என கோவை மத்திய சிறையில் இன்று ஆய்வு மேற்கொண்ட சிறைத் துறை ஏடிஜிபி சைலேந்திர பாபு கூறினார்.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பின் போது சிறைத் துறை ஏடிஜிபி சைலேந்திர பாபு கூறியதாவது:-

கோவை மத்திய சிறை 1872 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. பழமை மற்றும் பாரம்பரியம் நிறைந்த இந்த சிறையில் தற்போது 1720 கைதிகள் உள்ளனர். பெண்களுக்கு தனியாக சிறை உள்ளது. கோவை மத்திய சிறை வளாகத்தில் பல ஆயிரக்கணக்கில் மரங்கள் உள்ளன. மேலும், புதிதாக 10 ஆயிரம் மரங்கள் நட முடிவுசெய்யப்பட்டு தற்போது 2 ஆயிரம் மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. இந்த மரங்களுக்கு சிறைவாசிகளே தண்ணீர் ஊற்றி வருகின்றனர்.

மேலும், சிறைக் கைதிகள் மற்றும் இங்கு வருவோருக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரே வழங்கப்பட்டு வருகிறது. சிறைக்கைதிகளுக்கென டெக்ஸ்டைல் மில்லும் செயல்பட்டு வருகிறது. இங்கு காவலர்கள் அணியும் காக்கி துணிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

தமிழகத்தில் மொத்தம் 15 ஆயிரம் சிறைக்கைதிகள் உள்ளனர். அதில் 6 ஆயிரம் பேர் பல்கலைக் கழகம் மூலம் கல்வி மேற்கொண்டு வருகின்றனர். இன்று கோவை மத்திய சிறையில் உள்ள 8, 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 25 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. சிறைச்சாலையை கல்விச் சாலையாக மாற்றுவதே எங்களது நோக்கம். மேலும், சிறையில் உள்ளவர்களுக்கு பல்வேறு துறைகளில் சிறப்புப் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது" என்றார்.

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...