எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு உதகையில் படகு போட்டி

உதகை படகு இல்லத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக அவர் நடித்த “படகோட்டி” திரைப்பட மாதிரியில் வேடமணிந்து நடைபெற்ற படகு போட்டியினை இன்று மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.



அதனைத் தொடர்ந்து, “நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தைத் தவிர்க்கும்பொருட்டு, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருகட்டமாக பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலுமாக ஒழிக்க பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 24 பேர் அடங்கிய 2 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு பணியாணை வழங்கப்பட்டது.



இவர்களில் 12 பேர் கொண்ட ஒரு குழுவிற்கு உதகை படகு இல்லத்திலும், 12 பேர் கொண்ட மற்றொரு குழுவிற்கு உதகை தாவரவியல் பூங்காவில் பணிபுரிய பணியாணை வழங்கப்பட்டுள்ளது. இவர்களின் முக்கிய பணி படகு இல்லத்திற்கும், தாவரவியல் பூங்காவிற்கும் வருகைத்தரும் சுற்றுலா பயணிகளிடம் பிளாஸ்டிக் இல்லா நீலகிரி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதலும், அவர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின்மீது வண்ண ஸ்டிக்கர்கள் ஒட்டி அதற்கான தொகை ரூ.10 சுற்றுலா பயணிகளிடம் வசூலிக்கப்படுவதாகும். அச்சுற்றுலா பயணிகள் திரும்ப வரும்போது வண்ண ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மீள ஒப்படைக்கப்படும்போது வசூலிக்கப்பட்ட ரூ.10 சம்பந்தப்பட்ட சுற்றுலா பயணிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

அதுமட்டுமன்றி மாவட்டத்தின் 8 சோதனைச் சாவடிகளில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, நாள்தோறும் பிளாஸ்டிக் கொண்டு வரும் சுற்றுலா பயணிகளிடம் எல்லைகளிலே தடுத்தி நிறுத்தி அபராதம் விதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்திற்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டினை அறவே ஒழிக்க முடியும்.

இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட அலுவலர் ரேணுகாதேவி, சுற்றுலாத்துறை அலுவலர் ராஜன், சுற்றுலா வழிகாட்டியினர் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...