நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முயற்சிப்பது தேவையற்றது- புதியதமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முயற்சிப்பது தேவையற்றது எனவும், மாணவர்கள் வாழ்வாதாரத்தோடு விளையாடாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டுமென புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் இன்று டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முயற்சிப்பது தேவையற்றது. நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்காது. தமிழக அரசு மாணவர்கள் வாழ்வாதாரத்தோடு விளையாடாமல், உடனடியாக தரவரிசை பட்டியலை வெளியிட்டு மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். நீட் தேர்வினால் கிராமப்புற மாணவர்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு வராது. நீட் தேர்விற்கு மாணவர்களை தயார் படுத்த வேண்டும். 

மேலும் அதிமுக கட்சி பிரச்சனை என்பது உட்கட்சி விவகாரம். அதனை அக்கட்சியினர் பேசி தீர்த்துக் கொள்வார்கள். புதிய தமிழகம் கட்சி கொள்கையும், பாஜக கொள்கையும் ஒன்றாக இருப்பதாலேயே பாஜக-வை ஆதரிக்கிறோம். எங்கள் கொள்கை நாட்டின் நலனுக்கானது.

இவ்வாறு புதிய தமிழகம் கட்சி தலைவர் பேசினார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...