அடிப்படை திறமைகளை அதிகரிக்கும் வகையில் புதிய பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் - அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர்

இன்றைய பள்ளி பாடத்திட்டத்தினால் மாணவர்களுக்கு அடிப்படை அறிவே இல்லாத நிலை இருப்பதாகவும், மாணவர்களின் தன்னம்பிக்கை மற்றும் அடிப்படை திறமைகளை அதிகரிக்கும் வகையில் புதிய பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படுமென அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பள்ளி கல்வித்துறை சார்பில் புதிய பாடத்திட்டம் வடிவமைத்தல் குறித்த மண்டல அளவிலான கருத்தறியும் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன், எழுத்தாளர் தியோடர் பாஸ்கரன், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக துணைவேந்தர் ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டு பாடத்திட்டத்தை மாற்றியமைப்பது குறித்த கருத்துக்களை தெரிவித்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன் கூறியதாவது:-

இன்றைய பள்ளி பாடத்திட்டம் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை தருவதாக உள்ளது. மற்ற மாநிலங்களில் பாடத்திட்டங்கள் அடிக்கடி மாற்றப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக  பாடத்திட்டம் மேம்படுத்தாமல் இருப்பதால் மேல்படிப்பு மற்றும் நுழைவு தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். இன்றைய பள்ளி பாடத்திட்டத்தினால் மாணவர்களுக்கு அடிப்படை அறிவே இல்லாத நிலை உள்ளது. மாணவர்களின் தன்னம்பிக்கை, அடிப்படை திறமைகளை அதிகரிக்கும் வகையிலும், வருங்கால தொழில்நுட்ப, சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும்.

ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையில் பாடத்திட்டம் அமைக்கப்படும். புதிய பாடத்திட்டத்தில் தொழில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

இவ்வாறு அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன் தெரிவித்தார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...