நதிகள் இணைப்பு விரைவில் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் -மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் மகேஷ் சர்மா

நாட்டில் உள்ள ஆறுகளை தூய்மைப்படுத்தும் பணிகளை மாநில அரசுடன் இணைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்தார்.

கோவையில், விழா ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், தமிழகத்தின் மீது பெரியளவில் மரியாதை உள்ளதாகவும், தமிழக மக்களின் கருத்துக்கு மதிப்பளிதாக கூறியவர், ஹைட்ரோகார்பன் திட்டம் எக்காரணத்திற்கு கொண்டும் திணிக்கப்படவில்லை என்றார். நதிகள் இணைப்பு படிப்படியாக செயல்பட்டு வருவதாக கூறியவர், விரைவில் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் என்றார். 

முன்னதாக,கோவை வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 'வெள்ளையனே வெளியேறு' என்ற தலைப்பில் தமிழ்நாடு தென்னக பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற விழாவில் பேசிய அவர், சுத்தமான இந்தியா, வறுமையில்லா இந்தியா, ஊழலில்லா இந்தியா, பயங்கரவாதம் இல்லா இந்தியா, சாதி, மதவாதம் இல்லா இந்தியா என்கிற அம்சங்களின் அடிப்படையில் 2022ஆம் ஆண்டின் புதிய இந்தியாவின் இயக்கத்திற்கான மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.

மேலும், இந்த 5 அம்சங்களையும் மாணவர்களுடன் இணைந்து அவரும் உறுதி ஏற்றுக்கொண்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...