கட்சியில் நடப்பது அண்ணன் தம்பி சண்டை மட்டுமே தொடர்ந்து ஆட்சி 4 வருடம் நீடிக்கும் -அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

உலக யானைகள் தினம் முன்னிட்டு இன்று கோவை வந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், யானை- மனித மோதலை தடுக்க களிறு திட்டம் என்ற பெயரில் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது எனவும் தெரிவித்தவர், இரு வாகனங்கள் அதி விரைவு தடுப்பு குழுவிற்கு பிரத்யேகமாக வழங்கப்பட்டு இருப்பதாகவும், யானைகளால் ஏற்படும் பாதிப்பு குறித்து 180042545456 என்ற ஹெல்ப் லைன் எண்ணில் புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் இருந்து கும்கி யானைகள் கேரளா மாநிலம் பாலக்காடு பகுதிக்கு காட்டு யானைகளை கட்டுப்படுத்த அனுப்பபட்டுள்ளது எனவும் தெரிவித்த அமைச்சர், தண்ணீர் இல்லாமல் ஊருக்குள் புகும் வனவிலங்குகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அகழிகள் ஏற்படுத்தவும், வனப்பகுதிக்குள் தண்ணீர் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

முதல்வர் பழனிச்சாமி தலைமையில் கட்சியும், ஆட்சியும் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்த அவர், அம்மா அவர்களால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் கட்சியை வழி நடத்தி செல்வதாகவும், பொறுத்து இருந்து பார்க்கவும் என்றவர் தற்போது, நடைபெறுவது அண்ணன் தம்பி சண்டை மட்டுமே எனவும் ஆட்சி தொடர்ந்து 4 வருடம் நீடிக்கும் என தெரிவித்தார். 

ஓ.பி.எஸ் துணை முதல்வர் என்பது ஊடகங்களில் வரக்கூடிய செய்தி எனவும் முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பதே சரியானது என தெரிவித்தார். டி.டி.வி.தினகரனை 420 என்பது வாய் தவறி சொல்லி இருக்கலாம் என்றவர் 420 என சொல்லியதற்கு சில விளக்கங்கள் அவர் சொல்லி இருப்பதாகவும் கூறிய சீனிவாசன், இதை டேக்-இட்-இஸியாக எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்தார். மேலும் முதல்வர் எடப்பாடி  பழனிச்சாமி டி.டி.வி. தினகரனை 420 என்று சொன்னதே தனக்கு தெரியாது எனவும் முதல்வர் சொல்லி இருந்தால் அவரிடம் கேட்டுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார். யாரைப் பற்றியும் தரக்குறைவாக பேசினால் அது தவறு என்றவர் இதை அவர்கள் பேசி தீர்த்துக்கொள்வார்கள் என தெரிவித்தார். 

பொருளாளர் நியமனம் குறித்து ஏற்கனவே கட்சியில் இருந்து வெளியிட்ட அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்றார். தவறாக பேசுபவர்கள் தங்களை திருத்திக்கொள்ள வேண்டும் எனவும், முதல்வர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அரசியல் பிரச்சினைகளை பேசி தீர்க்க நடவடிக்ககைகள் எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா உதகையில் நடைபெற உள்ளதை அடுத்து அது குறித்து ஆலோசிக்க இன்று அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, செல்லூர் ராஜூ உள்ளிட்ட அமைச்சர்களுடன் தானும் பங்கேற்க இருப்பதாகவும் இதில் நூற்றாண்டு விழா குறிந்து ஆலோசிக்க இருப்பதாகவும் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...