விவசாயிகளின் நலன் கருதி, யானையை விரட்ட புதிய நவீன துப்பாக்கி அறிமுகம்

யானை மனித மோதல்கள், பயிர் சேதம் தவிர்ப்பதற்காக விவசாயிகள் கேட்கும் நவீன துப்பாக்கியை வழங்க தயாராகும் வனத்துறை. விவசாயிகள் கேட்பதைப் போல துப்பாக்கி உரிமம் வழங்க அரசு நிர்வாகிகள் மறுத்து வந்ததால், யானையால் பாதிக்கப்படும் விவசாயிகள் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளின் நலன் கருதியும், பயிர்கள் மற்றும் உயிரிழப்புகள் யானையால் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு வனத்துறை புதிய துப்பாக்கி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் வன விலங்குகளை விரட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட பைபர் குழாய் துப்பாக்கியின் செயல்பாடு பயன்பாட்டிற்கு எளிதாகவும், குறைவான விலையில் தயாரிக்க முடியும் என்ற காரணத்தால் தமிழக வனத்துறை கோவை பெரிய நாயக்கன்பாளையம் சரகத்திலுள்ள விவசாயிகளுக்கு இதை வழங்க இருக்கிறது.

பைபர் குழாய் துப்பாக்கி குறித்து வனத்துறையினர் கூறுகையில், பைபர் குழாயினுள் கார்பைடு கல் மற்றும் ஐந்து மில்லி நீர் ஊற்றி லைட்டரை கொண்டு பற்ற வைத்தால் வெடி சத்தமும், அழுகிய முட்டை போன்ற தூர் நாற்றமும் வெளிவருவதால், யானைகள் அங்கிருக்க முடியாமல் ஓடும் நிலைக்கு தள்ளப்படும் எனவும் யானையை விரட்ட பயன்படுத்தப்படும் பட்டாசுகள் மற்றும் ஆட்களின் செலவுகளை் குறைக்க வாய்புள்ளது என தெரிவித்தனர். 800 ரூபாயில் தயாரிக்கக் கூடிய இந்த தூப்பாக்கியை விவசாயிகள் எளிதாக வாங்கி பயன்படுத்த முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....