71-வது சுதந்திரதினத்தினை முன்னிட்டு கோவை வஉசி-யில் சிறப்பு நிகழ்ச்சி

சுதந்திர தினத்தினை முன்னிட்டு கோவை வ.உ.சி மைதானத்தில் நாளை (ஆகஸ்ட் 15) நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தேசியக் கொடியினை ஏற்றிவைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்க உள்ளார்.

அதைத் தொடர்ந்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மோட்டார் பொருந்திய தையல் இயந்திரங்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் விலையில்லா தையல் இந்திரம், சலவை பெட்டி மற்றும் வருவாய்த்துறையின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதி, விபத்து நிவாரண உதவித்தொகை என மொத்தம் 554 பயனாளிகளுக்கு ரூ.14.99 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் சிறப்பாக செயல்பட்ட அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வழங்க உள்ளார்.

பின்னர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. பங்கு கொண்ட அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பரிசுகளும் வழங்க உள்ளார்.

எனவே, நமது மாவட்டத்தைச் சேர்ந்த தேசபற்றாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் திரளாக பங்குகொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...