மாவோயிஸ்ட்டுகளுக்கு பென்டிரைவ் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கில் பார்த்திபன் என்பரை விடுதலை செய்யக்கோரி ஆட்சியரிடம் மனு

கோவை மத்திய சிறையில் உள்ள மாவோயிஸ்ட்டுகளுக்கு பென் டிரைவ் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பைச் சேர்ந்த பார்த்திபன் என்பரை விடுதலை செய்யக்கோரி, பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



கடந்த ஜூன் மாதம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாவோயிஸ்டுகள் அனூப் மற்றும் சைனா ஆகியோரிடம், ஆடையில் மறைத்துச் சென்று பென் டிரைவ் கொடுக்க முயன்றதாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரஷீது மற்றும் ஹரிஹர சர்மா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் பென் டிரைவ் கொடுத்து அனுப்பியதாக கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பார்த்திபன், கடந்த 11-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் பார்த்திபன் மீது காவல் துறையினர் பொய் வழக்கு பதிந்துள்ளதாகவும், அவரை விடுதலை செய்யக்கோரியும் தந்தை பெரியார் திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பந்தயசாலை பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

இது தொடர்பாக அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பைச் சேர்ந்த தினேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'உக்கடம் பகுதியில் மக்களுக்கு இடையூறாக விநாயகர் சதுர்த்தி விழா நடத்த எதிர்ப்பு தெரிவித்து மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் அளிக்க சென்ற பார்த்திபன் மீது போலீசார் பொய் வழக்கு பதிவு செய்து இருப்பதாகவும், மக்களுக்காக போராடுபவர்களை ஒடுக்கும் வகையில் காவல் துறையினர் செயல்படுகின்றனர்' என்றார்.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....