நாட்டின் பன்முக பண்பாடுகளை பேணிக்காக்க வேண்டும் - மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா

கோவை ஆத்துப்பாலம் பகுதியில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் மருத்துவ முகாம் தொடங்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமை துவங்கி வைப்பதற்காக மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கோவை வந்தார்.

அப்போது அவர்  செய்தியாளர்களிடம் பேசியதாவது :-  நாட்டின் 71-வது சுதந்திர நாளன்று வேற்றுமையில் ஒற்றுமை, மத நல்லிணக்கணம் மற்றும் நாட்டின் பன்முக பண்புகளை பேணி காப்பாற்ற உறுதியேற்க வேண்டும்.  



மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிக்க ஒவ்வொரு நடவடிக்கையாக எடுத்து வருகிறது. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு சரியாக செயல்பட தவறியதால் மாணவர்களின் மருத்துவ படிப்பு கேள்விக்குறியாகியுள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு மத்திய அரசு ஓராண்டு விலக்கு அளிப்பது ஏற்புடையது அல்ல, நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும்.

அதிமுக 3 அணிகளும் பாஜக-விடம் அடகு வைக்கப்பட்டுள்ளது. அதிமுக அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் மதுரை கூட்டம் ஒரு நாடகம். பாஜக-வுக்கு யார் முதலில் கூஜா தூக்குவது என்பதற்காகவே அந்த பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

தமிழக அரசு செயலிழந்து விட்டு கோமா நிலையில் உள்ளது. மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளைகளில் மக்கள் நலனை தமிழக அரசு காவு கொடுத்து வருகிறது. 

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். 

தமிழகத்தில் வலிமையான அரசு இல்லை என்பதால் காவிரியில் தண்ணீர் திறந்து விடமாட்டோம் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா கூறியிருப்பதும் கண்டனத்துக்குரியது. இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...