ஈஷா யோகா மையத்தில் 71-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

ஈஷா யோகா மையத்தில் 71-வது சுதந்திர தின விழா இன்று (ஆகஸ்ட் 15) 112 அடி ஆதி யோகியின் அருகாமையில் உள்ள மலை வாசலின் முன் கொண்டாடப்பட்டது. இதில் ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள கிராமப்புற மற்றும் பழங்குடியின குழந்தைகள், பெரியவர்கள், சுற்றுலா பயணிகள், பக்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



இந்நிகழ்ச்சியில், வெள்ளியங்கிரி உழவர் உற்பத்தியாளர் சங்க இயக்குனர் கிட்டுசாமி தேசிய கொடி ஏற்றி சிறப்பித்தார்.



தொடர்ந்து, இந்த விழாவில் சத்குரு வெளியிட்டுள்ள சுதந்திர தின செய்தி:-

"சுதந்திரம் அடைந்தது முதல்  நம் பாரத திருநாட்டில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. நம் வியாபாரத்துறை வளர்ந்துள்ளது. தொழிற்சாலைகள் பெருகியுள்ளன. நமது விஞ்ஞானமும் குறிப்பிடத்தக்க வளர்ச்ச்சியடைந்துள்ளது. எல்லாவற்றிக்கும் மேலாக நம் வாழ்க்கை தரம் மேம்பட்டுள்ளது.

இவையனைத்தையும் விட குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் நமது விவசாயிகள் குறைந்த கட்டமைப்பு மற்றும் வசதிகளை கொண்டே  விவசாயம் பற்றிய தங்கள் பாரம்பரிய அறிவு, அனுபவம், மற்றும் திறமைகளை வைத்து 100 கோடிகும் அதிகமான  மக்களுக்கு உணவளித்து வந்துள்ளார்கள். ஆனால் நம் நீர் மற்றும் நிலத்தின் வழங்கள் குறைந்து கொண்டு இருப்பது  நம் விவசாயிகளின் வாழ்க்கையை கடினமாக ஆக்கி உள்ளது.

இந்த சுதந்திர நன்னாளில், நாம் அனைவரும் நம் தேசத்தின்  நதிகளை காக்க, நம் தேசத்தின் நீர் மற்றும் நிலத்தை (மண் வளத்தை) காக்க  உறுதி எடுத்துக்  கொள்ள வேண்டும். 'நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்".

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...