கோவை மாநகரில் சுதந்திர தினத்தன்று மது விற்பனை செய்த 8 பேர் கைது

சுதந்திர தினத்தன்று மதுபானக்கடைகள் அடைக்கப்படுமென்று அரசு அறிவித்துள்ளது. இருந்தும் கோவையின் பல இடங்களில் மது விற்பனை படு ஜோராக நடைபெற்றது.

இது தொடர்பாக வந்த புகார்களை அடுத்து பீளமேடு, சரவணம்பட்டி, ஆர்.எஸ் புரம், ராமநாதபுரம் மற்றும் செல்வபுரம் ஆகிய பகுதிகளில் போலீசார் ரோந்து சென்றனர். 

அப்போது தடையை மீறி கள்ளத்தனமாக மது விற்பனை நடப்பது தெரியவந்தது. தொடர்ந்து, தடையை மீறி மது விற்பனை செய்ததாக 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், கைதானவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 129 மது பாட்டில்களையும் ரூ.600 ரொக்கத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...