தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் ஊக்க தொகை பெற விண்ணப்பிக்க கடைசி நாள் அறிவிப்பு

தேசிய அளவிலான  விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வழங்கப்படும் ஊக்கத் தொகை பெற விண்ணப்பங்களை சமர்பிக்க கடைசி நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

2017- 2018 ஆம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் உள்ள உயர் நிலை, மேல்நிலைப் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் பயிலும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகைக்கான விண்ணப்பங்களை வரும் 2017 ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் சமர்பிக்கக கோரி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ் உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு 10,000 ரூபாயும், கல்லூரி மற்றும் பல்கலைக் கழக மாணவர்களுக்கு 13,000 ரூபாயும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1-7-2016 முதல் 30-6-2017 முடியவுள்ள காலகட்டத்தில் தேசிய அளவிலான விளையாட்டில் பதக்கங்கள் பெற்றவர்கள் மட்டுமே இதற்கு தகுதியானவர்கள். குழு போட்டிகளில் முதல் 2 இடங்களையும், தனியார் போட்டிகளில் முதல் 3 இடங்களையும் பிடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் வெற்றி பெற்ற வீரர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் இந்திய பள்ளி விளையாட்டுகள் கூட்டமைப்பு, மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை அனைத்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகங்களில் 10 ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் அல்லது விண்ணப்பங்களை www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட இந்த விண்ணப்பங்கள் 2017 ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் சமர்பிக்கப்பட வேண்டும் எனவும் கூடுதல் விபரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை அலுவலகத்தை 044- 28364322 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...