நடிகர் திலகம் சிவாஜி சிலையை மீண்டும் கடற்கரை சாலையிலேயே நிறுவ வலியுறுத்தி கோவையில் உண்ணாவிரதம்


சென்னை கடற்கரை சாலையில் இருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உருவ சிலையை போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளதாகக் கூறி தமிழக அரசு நள்ளிரவில் அகற்றியது. இது சிவாஜி ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

இதனைத்தொடர்ந்து, சிவாஜி சிலையை மீண்டும் கடற்கரை காமராஜர் சாலையிலேயே, காந்தி சிலைக்கும் காமராஜர் சிலைக்கும் நடுவே அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவரது ரசிகர்கள் முன்வைத்தனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி, அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்லும் வகையில் கோவை மாநகரில், அனைத்து    சிவாஜி கணேசன் ரசிகர் அமைப்புகள் சார்பில் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கலைப்பிரிவின் தலைவரும், நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை தலைவருமான சந்திரசேகரன் தலைமையில் ஒருநாள் அடையாள கோரிக்கை உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.

நடிகர் திலகம் சிவாஜி, நடிப்பால் மக்களை கவர்ந்தவர்.  கலைத்துறை மூலம் தமிழக மக்களின் மனங்களில் நீங்காத இடத்தை பெற்றவர் என்பதால் அவரை சினிமா துறையை சார்ந்தவர் என்று மட்டும் பாராமல் அவருடைய சிலையை கடற்கரை சாலையில் அமைக்கபடவேண்டும் என்று கோரிக்கை விடுத்தவர்கள், மணிமண்டபத்தில் வேண்டுமானால் புது சிலை வைத்துக் கொள்ளட்டும். ஆனால் அகற்றபட்ட சிலையை அது இருந்த இடத்திலேயே நிறுவ வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.  

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...