கோவையில் தொழிலதிபரிடம் மோசடி செய்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்

கோவையில் தொழிலதிபரிடம் 2.43 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கு விசாரணையை வருகின்ற 31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ராஜ்குமார் உத்திரவிட்டார்.

கோவையில் கடந்த 2010-ம் ஆண்டு கணபதியை சேர்ந்த தொழிலதிபர் ராஜவேல் என்பவருக்கு கர்நாடக மாநிலத்தில் டெண்டர் எடுத்து தருவதாகக் கூறி சுகேஷ் சந்திரசேகர் 2.43 லட்சம் ரூபாய் மோசடி செய்தார். இந்த மோசடி தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் மற்றும் அவரது தந்தை சந்திரசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.

இவர், ஏற்கனவே இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் திஹார் சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கோவை இரண்டாவது குற்றவியல் நீதமன்றத்தில் மோசடி வழக்கு நடைபெற்று வரும் நிலையில் வழக்கு விசாரணைக்காக டெல்லியில் இருந்து இன்று சுகேஷ் சந்திரசேகர் அழைத்து வரப்பட்டு கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இன்று விசாரணையின் போது சுகேஷ் தரப்பில் இருந்து சில ஆவணங்கள் கோரப்பட்டதை அடுத்து, ஆவணங்களை சமர்பிக்க அரசு தரப்பில் காவல் அவகாசம் கோரப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கு மீதான விசாரணையை வருகின்ற 31-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி ராஜ்குமார் உத்தரவிட்டார். இதனையடுத்து மீண்டும் சுகேஷ் சந்திரசேகர் இரயில் மூலம் டெல்லி அழைத்துச் செல்லப்பட்டார்.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....