ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை கமிஷன் உண்மையை கொண்டு வராது- புதிய தமிழகம் கட்சி தலைவர் பேட்டி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை கமிஷன் உண்மையை கொண்டு வராது என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

கோவை குனியமுத்தூரில் அந்துள்ள தனது இல்லத்தில் இன்று டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை கமிஷன் உண்மையை கொண்டு வராது. எந்தவொரு ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையிலான விசாரணை கமிஷன்களும், உண்மையை வெளிக்கொண்டு வந்தது இல்லை.

நீட் தேர்வு விவகாரத்தில் ஓராண்டு தமிழகத்திற்கு விலக்கு அளிக்க உள்ளதாக மத்திய அரசு முடிவு எடுத்ததே தற்போது ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு காரணம். எதிர்க் கட்சிகளின் நெருக்கடி மற்றும் தொல்லைகளை தாங்கமுடியாமல் தான் தமிழக அரசு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முயற்சிக்கிறது. நீட் தேர்வில் விலக்கு அளித்தால் பயன் பெறுபவர்கள் குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.

கல்வித் திட்டங்களை மாற்றாமல் மாணவர்களின் கல்வித்தரத்தை குறைக்கும் வகையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு முயற்சிக்கக் கூடாது. மேலும் நீட் தேர்வு விவகாரத்தில் அரியலூரை சேர்ந்த மாணவி அனிதாவை எதிர்மனுதாரராக சேர்த்திருப்பது தவறானது. அவரை தலித் மாணவி என முன்னிறுத்தி இருப்பது தலித் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது.

இவ்வாறு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...