மறைந்த ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருந்தால் அது நீதி விசாரணையில் வெளிவரும்- சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன்

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருந்தால் அது நீதி விசாரணையில் வெளியேவரும் என கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் தெரிவித்தார்.

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிவிசாரணை நடத்தப்படும். வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்ற தற்போதைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்து, கோவை மாவட்ட அதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகை முன்பாக அதிமுக அம்மா அணியினர் இன்று  பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிமுக அம்மா அணியின் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அம்மன்அர்ஜூனன், கவுண்டம்பாளையம்  சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கொண்டாட்டத்துக்கு பின்னர் கோவை தெற்கு சட்ட மன்ற தொகுதி எம்எல்ஏ அம்மன் அர்ஜூனன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்ற  அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ஜெயலலிதாவின் கனவு திட்டங்களை எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றி வருகிறார்.

புரட்சித் தலைவி அம்மா அணியினர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று சொல்வார்கள். நீதி விசாரணை, சி.பி.ஐ விசாரணை எல்லாமே மனிதர்கள்தான் செய்கின்றனர். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருந்தால் அது நீதி விசாரணையில் வெளியேவரும். முனுசாமியின் கோரிக்கை சி.பி.ஐ விசாரணை, நாங்கள் நீதிவிசாரணை என்ற மக்களின் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளோம்.

வேதா இல்லத்தில் தனி நபர்களுக்கு உரிமை இருந்தால் அரசு அதற்கான இழப்பீட்டை கொடுக்கும். வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்பட்டால் அது ஜெயலலிதா மாணவ, மாணவியருக்கு உழைத்த உழைப்பின் சின்னமாக இருக்கும்.

இவ்வாறு கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் தெரிவித்தார்.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....