அதிமுக இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு- சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம்

அதிமுக இரு அணிகளும் இணைய வேண்டுமென்பதை ஒட்டுமொத்த அதிமுகவினரும் எதிர்நோக்கி காத்திருப்பதாக கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் தெரிவித்துள்ளார்.

கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக அம்மா அணியைச் சேர்ந்தவருமான எட்டிமடை சண்முகம், சுந்தராபுரம் பகுதியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்படுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து இருப்பது மக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இந்த அறிவிப்பு 8 மாத மனக்குமறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். அவரது மரணம் தொடர்பான சந்தேகங்களுக்கு தீர்வாக அமையும்.

ஜெயலலிதா வாழ்ந்த இடமான வேதா இல்லம் என்பது அதிமுக-வினருக்கு கோவில் போன்றது. இதனை தரிசிக்க அனைவருக்கும் அனுமதி வழங்கி இருப்பது மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி அடைய செய்துள்ளது. மேலும், ஜெயலலிதாவின் இல்லம் மற்றும் சொத்துக்களை உரிமை கொண்டாட தனிமனிதர்களுக்கு உரிமை கிடையாது. 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிறந்த முறையில் ஆட்சி நடத்தி வருகிறார். அதிமுக இரு அணிகளும் இணைய வேண்டுமென்பதை ஒட்டுமொத்த அதிமுக-வினரும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இவ்வாறு கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக அம்மா அணியைச் சேர்ந்தவருமான எட்டிமடை சண்முகம் தெரிவித்தார்.

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...