சிஐஐ கோவை மண்டலம் சார்பில் "கட்டிடம் நுண்ணறிவு தொழில் நுட்பங்கள்" குறித்து கருத்தரங்கு

சிஐஐ கோவை மண்டலத்தின் சார்பில் நடைபெற்ற 17-வது மாநாட்டில் "கட்டிடம் நுண்ணறிவு தொழில் நுட்பங்கள்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில், கட்டிடத் துறையில் உற்பத்தி செயல்திறன் மற்றும் தொழில்நுட்பங்கள், நுணுக்கங்கள், உற்பத்தி அமைப்பில் அறிவார்ந்த நிறுவனங்களை உருவாக்குவதன் முக்கியத்துவம் உள்ளிட்டவை குறித்து வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், பிரதான விருந்தினராக மைன்ட்ரீ லிமிடெட் நிர்வாகத் தலைவர் கிருஷ்ணகுமார் நடராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "எதிர்காலம் நுண்ணறிவு நிறுவனத்திற்கு சொந்தமானது. செயற்கை நுண்ணறிவு, கிளவுட் போன்ற சிக்கலான தொழில்நுட்பங்களை நிறுவனங்களே கையாள வேண்டும். அதனால் வளர்ச்சி அடைவது மற்றும் தொழில்நுட்பத்தில் செழிப்பும் ஏற்படும் என்றார். 

இதனைத்தொடர்ந்து பேசிய சிஐஐ கோயம்புத்தூர் மண்டலத்தின் தலைவரான எஸ்.நாராயணன் கூறுகையில், இந்த நிகழ்வானது உலகளாவிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளை புரிந்து கொள்வதற்கும், மேம்படுத்துவதற்கும் ஒரு தளமாக விளங்குகிறது என்றார்.

பின், ராபர்ட் போஷ் இன்ஜினியரிங் மற்றும் பிசினஷ் சொல்யூஷன்ஸ் துணைத் தலைவர் ஸ்ரீராம் டிவி உரையாற்றியதைத் தொடர்ந்து, கேஜி இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி பி.ஜெயமுரளி நன்றியுரையாற்றினார்.

மாநாட்டில், மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் (இந்தியா) பிரைவேட் லிமிடெட், அமேசான் இணைய சேவைகள் பிரைவேட் லிமிடெட், காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ், ராபர்ட் போஷ் பொறியியல் மற்றும் வர்த்தக தீர்வுகள் போன்ற முன்னணி தொழிற்துறைகளிலிருந்து 200-க்கும மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...