கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே அணைகட்ட உச்சநீதிமன்றம் ஒப்புதல் கொடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது -நடிகர் சீமான்

கர்நாடகாவில் மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே அணைகட்டக் கூடாது என தமிழகத்தில் அனைவரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழகறிஞர் அணைகட்ட ஒப்புதல் கொடுத்து இருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெறும் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்; 

அதிமுக இணைப்பே நாட்டுக்கு பிரச்சினையல்ல எனவும் இதையே பேசிக்கொண்டு இருப்பது அருவருப்பானது என தெரிவித்தார். கர்நாடகாவில் மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே அணைகட்டக் கூடாது என தமிழகத்தில் அனைவரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், 

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழகறிஞர் அணைகட்ட ஒப்புதல் கொடுத்து இருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது எனவும், பவானி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு தொடந்து தடுப்பு அணைகளை கட்டி வருகின்றது. இதனால் தமிழகம் பாலைவனம் ஆகும் நிலையில் அதிமுக இணைப்பு பற்றி பேசிக்கொண்டு இருப்பது சரியல்ல எனவும் அவர் தெரிவித்தார். 

நீட் விவகாரத்தில் பெரும்பாலான மாணவர்கள் பாதிக்கப்படுவதை மட்டும் பேசவேண்டும் என்றவர் நிரந்தரமாக நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தெரிவித்தார். தமிழகத்தில் பா.ஜ.க கால் ஊன்ற முடியாது என தெரிவித்தவர். 

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு வலுவான வாதத்தினை முன் வைக்க தவறி விட்டது எனவும், தமிழகம் பெரு முதலாளிகளின் வேட்டைக்காடாக மாறி வருகின்றது எனவும் தெரிவித்தார். எங்களுக்கு ரஜினி, கமல் தேவையில்லை. காமராஜரும், ஜீவானந்தமும், சிங்காரவேலர் போன்ற தலைவர்கள் தலைவர்கள் விரைவில் உருவாவர்கள் என்று தெரிவித்தார். 

சென்னையில் ரஜினிகாந்த் மனைவி ஆஸ்ரம் பள்ளியில் நடந்தை செய்தியாக கூட ஊடகங்கள் போடவில்லை எனவும், ரஜினிகாந்த் ஆஸ்ரம் பள்ளிக்கு போட்ட பூட்டை முதலில் திறக்கட்டும் பின்னர், நாட்டை காப்பாற்ற ரஜினிகாந்த் வரட்டும் என தெரிவித்தார்.

ஒரு தலைமுறை கோபமாக அரசை பார்த்துக்கொண்டு இருக்கின்றது என்றவர். மெரினாவில் எம்,ஜி.ஆர் சிலை இருக்கிறது, தமிழன் சிவாஜி கணேசன் சிலையை ஏதேதோ காரணம் சொல்லி எடுக்கின்றனர் எனவும் சீமான் குற்றம்சாட்டினார்.

மேகதாது பகுதியில் அணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை அதிர்ச்சியாகவும், வேடிக்கையாகவும் இருக்கின்றது என கூறியவர் மேகதாது விவகாரத்தில் அரசின் செயல்பாடு சரியில்லை என குற்றம் சாட்டினார்.

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...