கோவையில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்தியாவில் மாட்டின் பெயரால் மனிதர்களை அடித்துக் கொள்வதை கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் "கொன்றது ஆர்.எஸ்.எஸ் நான் சாட்சி" என்ற முழக்கத்தை முன்வைத்து கொடூர கொலைகளுக்கு எதிரான இந்தியா என்ற தலைப்பில் தேசம் தழுவிய பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. 



இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் ஆத்துப்பாலம் பகுதியில் வைத்து இந்தியாவில் மாட்டின் பெயரால் நடைபெறும் கொலைகளுக்கு ஆர்.எஸ்.எஸ் தான் காரணம் என்று சாட்சி பகரும் விதமாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



இப்போராட்டத்தில் கேம்பஸ் ஃப்ரண்ட்டின் கோவை மாவட்ட தலைவர் கே.பீர் முஹம்மது தலைமை தாங்கினார். மேலும், சிறப்பு அழைப்பாளர்களாக கேம்பஸ் ஃப்ரண்ட்-ன் மாநில பொதுச் செயலாளர் எல்.அப்துல் ரஹ்மான், பாப்புலர் ஃப்ரண்ட்-யின் மாநில பொருளாளர் என்.எம்.ஷாஜஹான், நேஷனல் வுமன்ஸ் ஃப்ரண்ட் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ஆயிஷா சித்திகா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். 



இப்போராட்டத்தில் மாட்டின் பெயரால் நடைபெறும் அனைத்து கொலைகளுக்கும் ஆர்.எஸ்.எஸ் தான் காரணம் என கோசங்கள் எழுப்பப்பட்டன. சாட்சி பகரும் விதமாக நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்களும், பொது மக்களும் கலந்துகொண்டு ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக சாட்சி கூறினார்கள். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....