மருத்துவத்துறையில் புதிய சாதனை படைக்கும் கங்கா மருத்துவமனையின் "ஏர் ஆம்புலன்ஸ்"

பொதுவாக மருத்துவத் துறையில் உடல் மாற்று அறுவை சிகிச்சை என்பது மிகப்பெரிய சாதனையாகும். இதில் பெரிதும் இடர்பாடாக இருப்பது ஒரு பகுதியில் இருந்து உடல் உறுப்பை வேறு பகுதிக்கு கொண்டு சென்று நோயாளிக்கு பொருத்துவதே. உடலில் இருந்து பிரிக்கப்பட்ட உடல் பாகங்கள் குறிப்பிட்ட நேரத்தில் தேவைப்படும் நோயாளியின் உடலில் பொருத்தப்பட வேண்டும். இதில் நேரத்தினை சரியான முறையில் கடைபிடிப்பது என்பது சிரமமாகவே மருத்துவத் துறையில் இருந்து வருகிறது. அவ்வாறான தருணங்களில் தற்போது கங்கா மருத்துவமனையினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள "ஏர் ஆம்புலன்ஸ்" சேவை பெருத்த வரவேற்பினை பெற்றுள்ளது.

அவ்வாறான ஒரு சம்பவமே சமீபத்தில நடைபெற்றுள்ளது. சென்னை குளோபல் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருதய நோயால் தனது இறுதிகட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த 28 வயது இளைஞருக்கு வேலூரில் மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயம் குறிப்பிட்ட நேரத்தில் கங்கா மருத்துவமனையின் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டு பொருத்தப்பட்டு அந்த இளைஞருக்கு மறுபிறவி அளிக்கப்பட்டுள்ளது.

வேலூரில் இருந்து சென்னைக்கு குறிப்பிட்ட நேரத்தில் இதயம் எடுத்தச் செல்லப்பட்டு செய்யப்பட்ட இந்த அறுவை சிகிச்சையில் கங்கா ஏர் ஆம்புலன்ஸ், விஐடீ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சிஎம்சி வேலூர், சென்னை சன்மார் குழு, குளோபல் மருத்துவமனை, வேலூர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்கள், சென்னை காவல்துறை ஆணையர், வேலூர் காவல் துறை, காரப்பாக்கம் காவல்துறை குழு மற்றும் சென்னை வானூர்தி போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்ட பலர் தங்களது சீறிய பணியினை வெளிப்படுத்தியுள்ளனர்.

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...