பாட்டிலோடு வந்தவரால் பரபரப்பு- மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரக்க பரக்க ஓடிய காவலர்கள்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்களன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெறுவது வழக்கம். இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு அளிப்பர்.

இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சூலூர் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்களது குழந்தைகளுடன் பட்டா பிரச்சனை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீ குளிக்க முயற்சித்தனர். அவர்களை அங்கிருந்து காவலர்கள் தடுத்து இச்செயலுக்கு எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு முகாமிற்கு வருபர்கள் தீவிர சோதனைக்கு பிறகே மாவட்ட ஆட்சியர் அலுவலகதிற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இன்று வழக்கம் போல் எல்லாருடைய உடைமைகளையும் சோதித்து காவலர்கள் அனுமதி அளித்துக் கொண்டிருந்தபோது பிள்ளையார்புரம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் ஒரு பாட்டிலில் குடிநீருடன் மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.



அவர் கொண்டு வந்த பாட்டிலில் மண்ணெண்ணை இருப்பதாகக் கருதி அங்கு பணியில் இருந்த ஆய்வாளர், உதவி ஆணையர் மற்றும் காவலர்கள் ஓடியதால் அவர்களுக்கு பின்னாலேயே பத்திரிகையாளர்களும் சென்றனர். பின்னர் லட்சுமணன் கொண்டு வந்திருந்தது குடி தண்ணீர் என்பதைத் தெரிந்த காவலர்கள் அசடு வழிந்தனர். 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...