சின்னாம்பதி அரசு பழங்குடியினர் பள்ளியில் இடைநிலை ஆசிரியை பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாணவர்களின் கல்வி நலனுக்காக, சின்னாம்பதி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி இடைநிலை ஆசிரியை காலியாக உள்ள பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

இது ஒப்பந்த முறையில் முற்றிலும் தற்காலிகமான தொகுப்பூதியத்தில் நிரப்புதல் ஆகும். இதில், கோவை மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின இனத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த ஆசிரியர் பயிற்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் 2017 ஆகஸ்ட் 24ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், தேர்வு வரும் ஆகஸ்ட் 31ம் தேதியன்று சென்னை பழங்குடியினர் நல இயக்குநர் குறிப்பிடும் இடத்தில் நடத்தப்படும். 

எனவே, இதற்கு சரியான தகுதியை பெற்றுள்ள பழங்குடியினர் நல இனத்தை சார்ந்த விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்கள் மற்றும் இரண்டு நகல்கள், இத்துடன் இரண்டு புகைப்படங்களுடன் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் வரும் ஆகஸ்ட் 21ம் தேதி முதல் 24ம் தேதிக்குள் மாலை 5 மணிக்குள் நேரில் ஆஜராக வேண்டும்.

மேலும், இதில் விண்ணப்பித்து தகுதித் தேர்விற்கு வருவோர் டி.டீ.அடி சான்று, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, இருப்பிடச்சான்று, சாதிச்சான்று, குடும்ப அட்டை, ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றிருப்பின் பட்டய சான்றிதழ், இதர பள்ளிகளில் பணியாற்றியிருப்பின் முன் அனுபவச் சான்று, வேலை வாய்ப்பக பதிவு அட்டை உள்ளிட்டவற்றை எடுத்து வர வேண்டும்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...