மது போதையில் வாகனம் ஓட்டிய 1500 பேரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது - போக்குவரத்து துணை ஆணையர் துரை தகவல்

கோவை மாநகரில் விபத்தினை தடுக்கும் வகையில் போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் ஓட்டுனர் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று போலீசார் அறிவித்திருந்தனர். 

இந்த நிலையில், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 1500-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் உரிமங்களை ரத்து செய்ய சம்மந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாக கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் துரை தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் சிம்ப்ளிசிட்டிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வாரந்தோறும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக வாகனத் தனிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாகனத்தனிக்கையின் போது தொடர்ச்சியாக மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை அடையாளம் கண்டு அவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய சம்மந்தப்பட்ட ஆர்.டி.ஓ.-க்கு காவல்துறை தரப்பில் இருந்து பரிந்துரை செய்யப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம் தொடங்கி இதுவரை 1500-க்கும் மேற்பட்டோர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களின் ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்ய தற்போது பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர்களிடம் விளக்கம் கேட்டு தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

தொடர்ந்து வார இறுதி நாட்களில் இந்த வாகனத்தனிக்கை நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....