பொது தேர்தல் நடந்தால் தான் மக்கள் விரும்பும் ஆட்சி அமையும் -மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன்

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேரின் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிக்கைக்கு பின்னரும் தமிழக கவர்னர் தொடர்ந்து அமைதி காப்பது ஏன் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு வீணாவதற்கு காரணமான இருக்கும்  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலகு வேண்டும் என வலியுறுத்தினார்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிக்கை வைத்த பின்னரும் ஆளுனர் தொடர்ந்து அமைதி காப்பது ஏன் என கேள்வி எழுப்பியவர், தமிழக அரசியல் சூழல் தெரிந்தும் ஆளுனர் மும்பை சென்றுள்ளதில் உள்நோக்கம் இருப்பதாக கருவதாகவும், இது பல விதமான சந்தேகங்களை எழுப்புகிறது என தெரிவித்தார்.

பொது தேர்தல் நடக்க வேண்டும், அப்போது தான் மக்கள் விரும்பும் ஆட்சி அமையும் என சுட்டிக் காட்டினார். சபாநாயகர் தனபால் முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கை, குழப்பத்தில் ஆதாயம் தேடும் சூழல் என குற்றம்சாட்டிய அவர், திருமாவளவன் அதை வரவேற்பது சரியல்ல என தெரிவித்தார். 

சாதியின் அடிப்படையில் முதல்வர் நியமனம் செய்வது தகுந்ததள்ள எனவும், இரு அணிகள் இணைப்பு என்பது நாடகமே என புகார் கூறினார். சிறையில் இருந்து சசிகலா வெளியே சென்றதாக வெளிவரும் வீடியோ பொய்யாக இருக்க வாய்ப்பு இல்லை எனவும் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...