டெங்கு அபாயத்தில் மசால் லே-அவுட்: நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?


கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கு ஆளாகி 20-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும், 50 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் டெங்குவை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

ஆனால், இன்னும் அதிகாரிகள் பார்வைக்கு செல்லாமல் இருக்கிறது மசால் லே-அவுட். புலியகுளம் பகுதியில் உள்ள இந்த தெருவில் சுமார் 200 குடும்பங்கள் வசிக்கின்றன. வாலாங்குளம் பகுதியில் இருந்து வரும் கழிவு நீர் இந்த மசால் லே-அவுட் வழியாக சென்று புலியகுளம் பகுதியில் உள்ள குட்டையில் சேர்கிறது. 



கழிவு நீர் பயணிக்கும் பாதையின் விளிம்பு பகுதியில், சுகாதாரமே இல்லாமல் ஒரு வாழ்கை நடத்தி வருகின்றனர் இப்பகுதி மக்கள். சுங்கம் பகுதியை அடுத்த காந்திநகரில் தொடங்கி, புலியகுளம் வரையில் இந்த கால்வாய் பயன்பட்டு வருகிறது. குப்பைகள் தேங்கி கழிவு நீர் செல்லும் வழி அடைபட்டுகிடப்பதாக அப்பகுதி மக்கள் தொடர் புகார் அளித்தனர். அதன் பேரில், கால்வாயின் பல இடங்கள் கவுன்சிலர் தலைமையில் தோண்டப்பட்டது. ஆனால், இன்று வரையில் அவை மூடப்படாமல் திறந்துகிடக்கின்றன. 



தற்போது, மீண்டும் குப்பை மண்டிகளால் கழிவு நீர் செல்லாமல் தேங்கி கிடக்கிறது. ‘சுற்றுப்புறத்தில் கழிவு நீர் தேங்காமல் பாத்துக்கொள்ளவும், அதிலிருந்து தான் டெங்குவை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகின்றன’ என்று கூறும் அரசுக்கு கழிவு நீர் கால்வாயே தேங்கி நிற்பதும், அதனால், டெங்கு பரவும் என்றும் தெரியவில்லையா? என்று மசால் லே-அவுட் பகுதி மக்கள் குமுறுகின்றனர். துப்புரவு தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதி இந்த மசால் லே-அவுட். ஊரையே சுத்தப்படுத்தும் இந்த மக்களின் வாழ்விடம் வாழ்வதற்கு அருகதையின்றி உள்ளது. 

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் கூறுகையில், ‘கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 20 முறைக்கு மேல் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளோம். உயர் அதிகாரிகள் மேற்பார்வையிட வரும் போது மட்டும் எங்கள் பகுதி சுத்தம் செய்யப்படுகிறது. 



அதிலும், அதிகாரிகள் பார்வையிடும் ஒரு சில பகுதிகள் மட்டும் கண்துடைப்புக்காக சுத்தம் செய்கின்றனர். இது மிகுந்த வேதனையளிக்கிறது. எங்கள் பகுதியில் பல குழந்தைகள் உள்ளனர் அவர்களது ஆரோக்கியம் கேள்விக் குறியாகிவிட்டது. திறந்து கிடக்கும் கால்வாய்க்குள் பிஞ்சு குழந்தைகள் விழுந்து எழுவதும் வாடிக்கையாகிவிட்டது.’ என்றார்.  

மசால் லே-அவுட் பகுதியை ஒட்டியே பொது கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் இந்த கழிப்பிடம் புனரமைக்கப்பட்டது. முகப்பில் மட்டும் வர்ண சாயங்கள் பூசி தரமான கழிப்பிடமாக காட்டப்படுகிறது. ஆனால், கழிவறையை உபயோகிக்க முடியாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. 

கழிப்பிடத்தின் பின்புற சுவர் இடிந்து சாய்ந்துள்ளது. எந்த நேரத்திலும் கட்டிடம் இடிந்து அருகில் உள்ள கூரை வீடுகள் மீது வீழும் அபாயம் உள்ளது. அசம்பாவிதம் ஏதும் நிகழும் முன்பு இம்மக்களின் பாதுகாப்பை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.​

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....