காரைக்கால் - பெங்களூரு பயணிகள் ரயில் விபத்தில் பயணிகள் உயிர்தப்பினர்

இன்று காலை 11.47 மணியளவில் விருத்தாசலம் சேலம் பயணிகள் ரயில் எண்.76850 ஆத்தூர் சின்னசேலம் இடையே ஆளியக்கமற்ற லெவல் கிராசிங்கை கடக்கும் போது, டிரெயிலர் கொண்ட ஒரு டிராக்டர் அவசரமாக லெவல் கிராசிங்கை கடக்க முற்பட்டு ரயிலின் பின்புறம் உள்ள எஞ்சின் பகுதியை சேதப்படுத்தியது. 



இதனால் அந்த டிராக்டரின் டிரெயிலர் தனியாக பிரிந்தது. டிராக்டர் ஓட்டி வந்தவர் தனது டிராக்டரை விரைவாக ஓட்டி சம்பவ இடத்தில் இருந்து அகன்று விட்டார். ரயிலின் இயக்குநர் டிராக்டர் ஓட்டி தனது காதில் மொபைல் போன் ஹெட்செட் போட்டுக் கொண்டு வந்ததால் ரயில் சத்தத்தை கவனிக்காமல் விரைவாக வந்து ரயிலில் மோதியதாக தெரிவித்துள்ளார்.  



மதியம் 01.05 மணிக்கு சேலத்தில் இருந்து மீட்புப்பணிகளுக்காக ஒரு ரயில் அனுப்பப்பட்டு அது தற்போது சேதமான ரயில் நிறுத்தப்பட்டுள்ள சின்னசேலம் ரயில்நிலையம் சென்றடைந்துள்ளது. திருச்சி பொன்மலை ரயில்பணிமனையில் இருந்து பொறியாளர்கள் சேதமான ரயிலை ஆய்வு செய்து வருகின்றனர். ஆராய்ந்து அதை அப்படியே எடுத்து வர முடியுமா அல்லது சேதமான பகுதியை நீக்கி விட்டு எடுத்து வர முடியுமா என்று முடிவு செய்வார்கள். 



இந்த விபத்தால், காரைக்கால் பெங்களூரு பயணிகள் ரயில் எண் 56513 சின்னசேலத்தில் நிறுத்தப்பட்டு தற்போது சுமார் 2 மணி நேரம் தாமதமாக சேலம் நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த விபத்தால் யாருக்கும் காயம் உயிரிழப்பு ஏதுமில்லை எதுவும் ஏற்படவில்லை. 

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....